கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!

சாலியபுர, தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் மற்றும் வீட்டுக்கு வந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு வந்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




