மாணவர்கள் ஏற்றிச் சென்ற வேன் திடீர் விபத்து!

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று காலை திஸ்பனே சந்தி பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




