கொழும்பில் அதிரடி : 826 லிட்டர் சட்டவிரோத டீசலுடன் இருவர் கைது

கொழும்பில் உரிமம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசலைச் சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சோதனையின் போது ,826 லிட்டர் டீசல் எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 72,210 பணம் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 61 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே வெள்ளவத்தை மற்றும் வரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத எரிபொருள் விற்பனை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.




