மனோ கணேசனின் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத அனுர

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, “ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி அனுரகுமார, அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Follow & Share




