சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான பயணிகள் இருவரும், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, அறிவிப்பதற்கு ஏதுமற்ற பொருட்களைக் கொண்டு செல்வோர் பயன்படுத்தும் பசுமைப் பாதை ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
Follow & Share




