தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவனத்திற்கு !

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு அநாவசியமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow & Share




