LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

பதுளை ஸ்பிரிங்வெலி பாலம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

December 29, 2025 · Claude

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீதியானது இப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகளுக்கும் , தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமான ஒரு பாதையாகும்.

கடந்த வாரம் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இந்தப் பாலம் பலத்த சேதமடைந்து முற்றாக அழிவடைந்திருந்தது. இதனால் அப்பகுதிக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இந்நிலையில், (27) அன்று பெய்லி பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து, மக்களின் பாவனைக்காகவும் வாகனப் போக்குவரத்திற்காகவும் பாலத்தைத் திறந்துவிட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Related Stories

Explore More ›