ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பு இடம்பெறலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், தற்போது ஆரம்பகட்ட கணக்கீடுகள் மற்றும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், புதிய கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிவிப்பு ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow & Share




