LATEST
கண்டி எசல பெரஹெரா – விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்! ஆசியக் கோப்பை 2026 – இலங்கையின் 15 பேர் கொண்ட மகளிர் அணி அறிவிப்பு! நாட்டில் டெங்கு நோயாளர்கள் 91 ஆயிரத்தை கடந்தனர்! ரூ.8 லட்சம் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்? இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான எதிர்பார்ப்பு – மத்திய வங்கி! மத்திய கிழக்கில் நீடிக்கும் பணி – அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடும் அழுத்தம்! வத்தளை ஹோட்டல் துப்#பாக்கிச் சூ#டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது! ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை! கண்டி எசல பெரஹெரா – விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்! ஆசியக் கோப்பை 2026 – இலங்கையின் 15 பேர் கொண்ட மகளிர் அணி அறிவிப்பு! நாட்டில் டெங்கு நோயாளர்கள் 91 ஆயிரத்தை கடந்தனர்! ரூ.8 லட்சம் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்? இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான எதிர்பார்ப்பு – மத்திய வங்கி! மத்திய கிழக்கில் நீடிக்கும் பணி – அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடும் அழுத்தம்! வத்தளை ஹோட்டல் துப்#பாக்கிச் சூ#டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது! ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை!
உள்ளூர்

75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

August 14, 2026 · National Tamil LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். 

அத்துடன், பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும். 

காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையிலான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

குறிப்பிட்ட சில கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

Explore More ›