கொழும்பிற்கு இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் BQ 2 தளத்தில் பொறுப்பேற்கப்பட்டன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Follow & Share




