சமையல் எரிவாயு விலை உயர்வு

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள இறக்குமதி செலவுகளை கருத்திற்கொண்டு, நாட்டிலும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலைத்திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை,1910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புதுவருடம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இயலுமானவரை குறைந்தபட்ச விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




