தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிற்கு முன்பாக நேற்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடுதிக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த விடுதி உரிமையாளரின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் உயிரிழந்தார்.
Follow & Share




