தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயத்தில் நிலவிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் புதன்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஷான் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் நாளை (12) பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் ஒரு நாள் தாமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 13 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகும்.
Follow & Share




