ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: அமெரிக்க அறிக்கை கோரப்பட்டதா? – UNP கேள்வி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் முழுமையான தகவல்களை தற்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பெற்றுள்ளதா என அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதலுக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் உதவியை நாடியிருந்ததாகவும், தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு ஆதரவுடன் உண்மைகளை கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டுமெனில், சர்வதேச விசாரணைத் தகவல்களும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Follow & Share




