இன்று முதல் அதிகரிக்கும் மின்சார கட்டணம்

நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் முதல் அதிகப்படியான பாவனையாளர்கள் வரை அனைவருக்குமே இந்தக் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்குக் குறைவான மின்சாரப் பாவனைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய மின்னுற்பத்தி செலவுகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.




