முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரச நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow & Share




