LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

பாடசாலைக்கு அருகிலுள்ள காணியில் கைக்குண்டு மீட்பு

January 7, 2026 · Claude

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் நேற்று வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். 

இப்பகுதியில் அண்மையில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பெய்த மழை காரணமாகவும் மண்ணுக்குள் புதைந்திருந்த கைக்குண்டு வெளியில் தெரிந்ததாகக் கூறப்படுகிறது. 

அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார், குண்டு கிடந்த பகுதியைச் சூழப் பாதுகாப்பை பலப்படுத்தினர். 

மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதியில் நடமாடிய விடுதலைப் புலிகளினால் இது கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

குண்டை அவ்விடத்திலிருந்து அகற்றிச் செயலிழக்கச் செய்வதற்காக நீதவான் நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது. சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ. கபூர் தலைமையிலான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

Explore More ›