மே 25 வரை நீடிக்கும் வெப்பம்

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதிக வெப்பமான வானிலையால் பகல் பொழுதில் மாணவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு சிறுவர் வைத்திய நிபுணர் ச்சன்ன டி சில்வா பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது.
வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது ‘அதிக அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Follow & Share




