IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை வந்தடைந்தார்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார்.
குறித்த விஜயத்தின் போது அரச அதிகாரிகள் பலரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




