எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி விநியோகிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,
வரவுள்ள டீசல் கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த மாத இறுதிக்குள் மற்றுமொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.
அந்தப் பெற்றோல் கப்பலில் மொத்தம் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
Follow & Share




