LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

கட்டுநாயக்கவில் 50 கோடி பெறுமதியான குஷ் மீட்பு

January 6, 2026 · Claude

50 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைப்பற்றப்பட்டது.

விமான நிலைய வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் அதிக பெறுமதியைக் கொண்ட போதைப்பொருள் தொகையாக இது அமைந்துள்ளது.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பயணிகள் மூவர் சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சோதனையிடப்பட்டனர். இந்தியாவின் மும்பை பகுதியைச் சேர்ந்த அவர்களில் இருவர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்கார்களினால் அவர்களிடம் இந்த குஷ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் போதைப்பொருளை கடத்துமாறும் அதற்காக பெங்கொக் சுற்றுலாப் பயணமொன்றை பெற்றுத் தருவதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூவரும் இன்று காலை 11.07க்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த யு.எல்.403 விமானத்தில் வருகை தந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›