11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் படி பதுளை, காலி, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow & Share




