நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்க மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று நீதவான் நதி அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் வழக்கை பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Follow & Share




