இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் நடக்க தீர்மானம்

பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாயக்கிழமை முதல் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.02.06ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.
இதற்கமைய பாராளுமன்றம் கூடும் தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Follow & Share




