அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை காரணமாக நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்களும் விநியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்ச் சூழலின் தாக்கத்தால் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
இத்தகைய பின்னணியில், நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.
Follow & Share




