தனியார் பிரிவின் ஊதியம் அதிகரிப்பு

2026 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தனியார் பிரிவு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரிக்குமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்த சம்பளம் 1080 ரூபாவிலிருந்து 1200 ஆக உயர்வடைந்துள்ளது. ஊழியர்களின் அடிப்படை சம்பள மறுசீரமைப்பு சட்டத்திற்கமைய இந்த ஊதிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய சேவை வழங்குனர் குறித்த ஊதிய அதிகரிப்பை அமுல்படுத்த வேண்டுமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow & Share




