சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு திட்டங்கள் அமல்படுத்தி வரும் நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
பயிற்சிக்கு பின்னரான மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
நிலவும் கடுமையான வெப்ப சூழலிலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களுக்கென வைத்தியர்கள் இதனைவிடவும் மனிதாபிமானத்தடன் நடந்துகொள்ள வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
Follow & Share




