சில மாவட்டங்களில் மழை; பல பகுதிகளில் பலத்த காற்று

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலையே நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Follow & Share

