இன்று சில இடங்களுக்கு மழை

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான காலநிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Follow & Share




