யாழில் எலிக்காய்ச்சல் : ஒருவர் பலி

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்
Follow & Share




