பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுர மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரையில் அமுலில் இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
Follow & Share




