சிறீதரன் எம்.பியிடம் விளக்கம் கோரும் முன்னாள் மனித உரிமை ஆர்வலர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், தற்போது இராணுவ அதிகாரியாக கடமையாற்றும் ஓ.ஆர்.ராஜசிங்கை தலைமை கணக்காய்வாளராக நியமிப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், இராணுவமயமாக்கலை வலுப்படுத்துவதாகவும் உள்ள செயல் என எச்சரித்துள்ளார்.
அரசியலமைப்பு சபை ராஜசிங்கின் வேட்புமனுவை நிராகரித்துள்ளது, இது 8 மாதங்களில் நான்காவது முறையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிராகரித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow & Share




