ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்

மத்திய கிழக்கின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை திடீரென மூடப்பட்டால், அதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனம் 2026 மார்ச் மாதம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் பட்சத்தில், இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
உணவுப் பொருட்களின் விலைகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




