இலங்கைக்கு சீனா நன்கொடை!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சீன அரசாங்கம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை அவசர நிதி உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், பேரிடர் நிவாரண முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, இலங்கையில் உள்ள சீன வர்த்தக சபை மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியவை நன்கொடை திட்டங்களைத் தொடங்கி, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆதரிப்பதற்காக கூட்டாக ரூ. 10 மில்லியன் திரட்டியுள்ளன.
Follow & Share




