தென்கடலில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்: நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றல்

தென்கடல் பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டு, கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகை கரைக்கு கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Follow & Share




