LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

தையிட்டியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

December 27, 2025 · Claude

எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று தையிட்டியிலே வழமைப்போன்று நடைபெறுகின்ற போராட்டம் ஒரு மாபெரும் போராட்டமாக நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டத்திற்கு ஏனைய அரசியல் தரப்புக்களுக்கும் கலந்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் குறித்த காணி உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலே 03ஆம் திகதி நடைபெற இருக்கின்ற குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களை கடந்து உங்களுடைய நேரங்களை ஒதுக்கி அந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த என்.பி.பி அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை இனவாத அரசாங்கம் என்று கூறி அவர்கள் வந்த பாதை தவறான பாதை என்பதனால் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசிய வாதம் என்ற ஒரு நிலைப்பாட்டிற்குள் சென்றார்கள் என்றும் தாங்கள் எல்லோரையும் சமனாக மதித்து சட்டத்தின் ஆட்சியை எல்லோருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தி இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை நடைமுறைப்படுத்தினால் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Explore More ›