போதைப்பொருட்களுடன் மலேசிய பிரஜை கைது!

25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிக் கொண்ட கொகெய்ன் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மலேசிய நாட்டவர் எனவும் அவர் அபுதாபியிலிருந்து இலங்கை வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவரது கைப்பையிலிருந்து சொக்லேட் அடங்கிய டின்களில் இந்த 5 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow & Share




