05 மீன்பிடிப் படகுகள் பறிமுதல்!

தெஹி பாலேக்குச் சொந்தமான 05 மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தனது பொறுப்பில் எடுத்துள்ளது.
திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த 05 படகுகளும் பொறுப்பேற்கப்பட்டதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாய் எனவும் குறிப்பிடப்படுகிறது.
Follow & Share




