சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம் : சுனாமி அவதான நிலை நீக்கம்

இந்து சமுத்திரத்தின் இந்தோனேஷியா, வடக்கு சுமாத்ராவில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடுப்பதற்கான தேவை தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் சுனாமி அவதான நிலை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 10.26க்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலமட்டத்திலிருந்து 25 கிலோமீற்றர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow & Share




