வான் பாய ஆரம்பித்துள்ள விக்டோரியா

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்மித்ததாக தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கலா வாவி மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்களும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹாகந்த மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
Follow & Share




