LATEST
பயணிகளுக்காக புதிய போக்குவரத்து இணையதளம் அறிமுகம்! “வெள்ளப்பெருக்கிற்கு தயாராக இருக்க வேண்டும்” – வானிலை அதிகாரிகள்! தேடப்பட்ட ‘பஸ் லலித்’ சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்! இலஞ்ச  குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு! சில பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை! இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு! பயணிகளுக்காக புதிய போக்குவரத்து இணையதளம் அறிமுகம்! “வெள்ளப்பெருக்கிற்கு தயாராக இருக்க வேண்டும்” – வானிலை அதிகாரிகள்! தேடப்பட்ட ‘பஸ் லலித்’ சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்! இலஞ்ச  குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு! சில பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை! இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு!
உள்ளூர்

தேடப்பட்ட ‘பஸ் லலித்’ சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்!

August 25, 2026 · National Tamil LK

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ என்பவர் மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2021.09.20 அன்று நெலுன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்த முயன்றமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022.10.16 அன்று மூவரை வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் பஸ் லலித்திற்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›