நாளை வெப்பமான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை நிலைக்கு” உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணணக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவான நீர் அருந்தவும் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow & Share




