பலத்த மின்னல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறைஇ காலிஇ மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (04) இரவு 11 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.
இது குறித்து அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Follow & Share




