அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு (North-Easterly) திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பின்வரும் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 45-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
களுத்துறை முதல் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்பு.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு.
எனவேஇ கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Follow & Share




