குழந்தைகள் பாதுகாப்புக்காக எழுந்த மக்கள் குரல்!

குழந்தைகள் மீதான து#பிரயோக புகார்களுக்கு விரைவாக நீதி வழங்கக் கோரி, 40,000 கையொப்பங்கள் அடங்கிய மனு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.
பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தீர்க்கப்படாத குழந்தைகள் பாதுகாப்பு வழக்குகள் மற்றும் தாமதமான நீதிமன்ற நடைமுறைகள் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை ஆபத்துக்குள்ளாக்குகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் மீதான வன்முறைப் புகார்களை விசாரிக்க சிறப்பு பொலிஸ் பிரிவு அமைக்க வேண்டும் என்றும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குழந்தைகள் பாதுகாப்பை தேசிய முன்னுரிமையாகக் கொண்டு, தாமதமின்றி நீதி வழங்க வேண்டும் என்பதே இந்த மனுவின் முக்கிய கோரிக்கையாகும்.
Follow & Share




