LATEST
காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்! காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்!
உள்ளூர்

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

August 18, 2026 · National Tamil LK

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும். 

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›