ரொஷான் அமரசிங்கவுக்கு CID பணிப்பாளர் பதவி!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.
இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இயக்குநராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் பதவி வெற்றிடமாக இருந்தது.
இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



