தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்!

இங்கிலாந்து எதிர் இலங்கைக்கான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 (T20I) போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.
மான்செஸ்டரில் இலங்கை நேரப்படி இரவு 7:00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு, இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாத இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவர் குசல் மெண்டிஸ், நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டார்.
அவருடன் அசித பெர்னாண்டோவும் இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளார், மேலும் அவர்கள் இருவரும் வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை குழாமில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow & Share




