LATEST
எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்!
உள்ளூர்

வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!

August 17, 2026 · National Tamil LK

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.​ 

அதேநேரம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 

காற்று மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோமீற்றராகக் காணப்படும். 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர் மற்றும் கடற்படை சமூகத்தினர் மிகவும் அவதானமாகச் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

Explore More ›