மண்சரிவு எச்சரிக்கை நீக்கம்

மழை குறைவடைந்துள்ள நிலையில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீக்கப்பட்ட இடங்களை பார்வையிடச் செல்வதை தவிர்க்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பான்மையான இடங்களில் மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழைக்கு வாய்ப்புள்ளது.
Follow & Share




